Tuesday, November 13, 2012

என்னால் ஒரு போதும் முடியாது . . . .


ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல் ,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
என்னால் முடியாது .

ன் உளத் தூய்மையின்
நறுமணத்தை நுகராதிருக்க ,
மடியில் தலை சாய்த்துக் கண் மூடிக்
களிப்பின் சிகரம் தொடாதிருக்க ,
ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டு , முத்தமிட்டு
மோகத்தில் மூர்ச்சை ஆகாதிருக்க ,
பிரிவின் பெருங் கனத்தைக் காலத்தின்
கோலமென்று கணக்குத் தீர்க்க . . . .
என்னால் முடியாது

ன்னையே நினைந்துருகும்
பிரிவின் கடுங் காய்ச்சலை ,
உன்னையே உடனிருத்திக் களமாடும்
கனவின் உறக்கமற்ற சூறாவளியை . . . .
எதிர் கொண்டு நிற்க
என்னால் முடியாது .

ன்னையே
நினைந்து , நினைந்து
நனைந்து , நனைந்து ,
கரைந்து , கரைந்து ,
என்னுள்
கலந்து , கலந்து போவதை ,
எங்கிருந்தோ நீ  நிகழ்த்துவதைத்
தாங்கிக் கொள்ள . . . .
என்னால் ஒரு போதும் முடியாது .

4 comments:

Yaathoramani.blogspot.com said...

எங்கிருந்தோ நீ நிகழ்த்துவதை...//

ஆழமான சிந்தனை
அற்புதமான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

ilangovan thayumanavar said...

nanbaa.. nanbaa..

udaniruthik kalamaadum kanavin urakkamattra sooravali...

nanbaa.. nanbaa//

கே. பி. ஜனா... said...

கவிதை அருமை!

Unknown said...

எப்படி முடிகிறது இப்படி எழுத ?மிக மிக அருமை.

Post a Comment