Monday, January 15, 2018

கதை கதையாம் காரணமாம் 01

ஒரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை கேட்டார்கள் .
குழந்தைகளுக்கு என்பதால் கதைகள் குறித்து எழுதினேன் .

சென்ற ஆண்டு மார்ச் மாதமே எழுதி அனுப்பினேன் . 
கட்டுரை  கிடைத்ததும் , வாசித்து விட்டுப் பெரிதும் பாராட்டினார்கள் .

மிக நேர்த்தியாக , சிறப்பான வடிவமைப்புடன் வரும் என்றார்கள் .
நம்பினேன் .

ஆறு மாதம் ஒரு தகவலும் இல்லை .

ஆறு மாதம் கழித்துக் கேட்ட போது   , மாத இதழில் வரும் என்றார்கள் .

ஆண்டு மலருக்கு என்று தான் முதலில் சொல்லப்பட்டது . மாத இதழிலாவது வரட்டும் என்று காத்திருந்தேன் .

"அந்த " மாத இதழ் வந்தது . அரைப் பக்கத்திற்கு , தாறுமாறாக வெட்டிப் பிரசுரம் செய்து இருந்தார்கள் .

பக்க அளவு குறைவாக இருந்தால் , நானே குறைத்துக் கொடுத்திருப்பேன் ...

ஒரு வார்த்தை சொல்லவில்லை . 
ஒரு வார்த்தை கேட்கவில்லை .

மனதுக்கு ரொம்ப ரொம்ப சங்கடமாகிவிட்டது .

முழுக் கட்டுரையும் இப்போது உங்களுக்கு , என் கையெழுத்திலையே 
போட்டிருக்கிறேன் ... தட்டச்சு செய்ய நேரமில்லை .
பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .