Saturday, February 18, 2017

அதற்குள் ஏன் குளிர்ந்து போனாய் சிவா ?

அப்போது அவன் மதுரையில் புடவைகள் விற்றுக் கொண்டிருந்தான் .
ஒரு கலை இரவு முடிந்த பிறகு, பின்தொடர்ந்து வந்தான். தன் கவிதைகளை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான்.
மனம் கவரும் எழுத்து .
திருச்சியில் இருந்து கவிஞர் நந்தலாலா நடத்திக் கொண்டிருந்த இதழுக்கு நானே அனுப்பி வைத்தேன்.
அது பிரசுரமானது .
அதுவே அச்சில் வந்த அவனது முதல் எழுத்து .
அந்த இதழை எடுத்துக் கொண்டு ஒரு அதிகாலையில் என்னைத் தேடி வந்தான் .
Bk என்று என் கைகளைப் பற்றிக் கொண்டான் .
அந்த வெப்பம் இன்னும் இருக்கிறதே ....
அதற்குள் ஏன் குளிர்ந்து போனாய் சிவா ?
அய்யோ .....
Image may contain: one or more people and closeup

No comments:

Post a Comment