Monday, September 30, 2013

ஒற்றைச் சொல்

தாத்தாக்களும், பாட்டிகளும்
அம்மா , அப்பாவும் ,
அக்காக்களும்
ஆரம்ப , நடு , உயர் பள்ளி ஆசிரியர்களும் ,
ஒரு சில கல்லூரி ஆசான்களும் ,
வேலைக்கு வந்தவிடத்தில்
அபூர்வமாய்ச் சிலரும்
இப்படித்தான் அழைத்தார்கள் .

இன்னும் கூட மிச்சமிருக்கிறார்கள் ஓரிருவர் .
அப்படி எல்லோரும் அழைத்தது ,
என்னைத்தானென்ற போதும் ,
அழைக்கப்பட்டது நான் மட்டும் தான் .
எல்லோருமழைத்தது  எல்லாம்
செவிகளில் நுழைந்து திரும்பிய ஓசைகள் .

அதே ஒற்றைச் சொல்லால்
அவள் அழைக்கிற போது ,
உடல் , உயிர் , உணர்வு , ஆன்மாவென்று
எல்லாவற்றையும் அழைக்கிறது அது .
ஒற்றைச்சொல் மந்திரமாகும்
சூட்சுமமது .

அழைக்க அல்லாது ,
உயிர்ப்பிக்க அழைத்த ஒற்றைச் சொல்

"டே "....






1 comment:

Geetha said...

உண்மைதான்.மனதுக்கு பிடித்தவர்கள் எப்படி அழைத்தாலும் சுகமே.கவிதை நன்று.

Post a Comment