Tuesday, December 8, 2020

இறுதி நிர்வாணமும் , நிர்வாணத்தின் இறுதியும் ...

 இறுதி நிர்வாணமும் , நிர்வாணத்தின் இறுதியும் ...


ங்கிருந்து போனவன்

அங்கு அகதியானான் .


த்துவம் தரைமட்டமாகி விட, 

பதுங்கு குழியில் பயந்திருந்தான் .



ல்லாப் பாதைகளும்  அடைபட்டு விட ,

தப்பித்துப் போகத் காத்திருந்தான் .


டலின் அலையிலும், கரையிலும் ,

காலனேறி வருவது  கண்டு கலக்கமுற்றான் .


தாய்நாடு திரும்பும் தாகம் வெள்ளமாக ,

வழியின்றித் தவித்திருந்தான் .


தாய்நாடும் தனக்கெதிராக நிற்கப் , 

புலம்  தெரியாது புலனழிந்தான்.


னக்கென்றொரு தாய்நாடு இலாததைத் 

தாமதமாய் உணர்ந்து தருக்கழிந்தான் .


யுதங்கள் ஊளையிட்ட அகாலத்தில் 

கனத்த மௌனத்தோடு கட்டுமரமேறினான் .


லகுகாக்க உரைத்த தத்துவம் , தன்னையும் 

காப்பாற்றாதது கண்டு பேதலித்தான் .


சைகளை அறுத்தவன்  உயிர் பிழைக்கும் 

ஒற்றை ஆசையைச் சுமந்து பயணித்தான் .


முன்பு வந்தது போலன்றி, கடல்நீரின் 

அடர்த்தி கூடி அடர் சிவப்பானதை உணர்ந்தான் .


ரையேறியதும் , வந்தது கட்டுமரத்திலல்ல ;

கட்டித்தழுவிய உடல்கள் என்றறிந்து நடுங்கினான்.


பிறந்தவீடும் புகுந்தவீடும் புறந்தள்ளிவிட 

நிராகரிப்பின் கசப்போடு சுண்டாவைத் தேடியலைந்தான் .


சுண்டா காணாமல் போனவர்களில் பட்டியலில்...


சைபோலும் அவன் மகள் நிர்வாணமாகக் கிடந்தாள் .


பிறப்புறுப்பில் குருதி பெருகிக் காய்ந்து கிடந்தது .


கைகள் பின்புறம் கட்டப்பட்டு இறந்து கிடந்தனர் 

அந்தத் தோட்டத்து ஆண்கள் .


முன்பொருமுறை முற்பகலில் 

ஞானம் பெற்ற அதே வேதமரத்தின் 

தாழ்ந்த கிளையொன்றில் , குருதி தோய்ந்த 

தன் துவராடையின் துணைகொண்டு 

தூக்கிட்டு மாண்டு போனான் .


றுதி நிர்வாணம் அறிந்தவன்,

நிர்வாணத்தை இறுதியில் தேர்ந்தான் .


ப்ரகலாதன் 

(பாரதி கிருஷ்ணகுமார் )



2 comments:

drJeeva said...

ஆஹா !

Unknown said...

வலியைத் தவிர ஒன்றும் இல்லை

Post a Comment