Monday, May 11, 2015

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்...

01.01.2000 அன்று வடசென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் , கலைஞர்கள் சங்கக்  கலை இரவில் நான் பேசியது இன்றைக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது .

"முன்பெல்லாம் குற்றவியல் வழக்குகளில் தீர்ப்பு வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியா அல்லது குற்றவாளியா என்று தெரிந்து கொள்ள முடியும்.
இப்போதெல்லாம் தீர்ப்பு வந்தால், நீதிபதி நிரபராதியா அல்லது குற்றவாளியா என்று தெரிந்து கொள்ள முடிகிறது."  

இந்த நினைவாற்றல் பெரும் துன்பம் அளிக்கிறது. "எதைப் பற்றியுமே பிரக்ஞை இல்லாதவர்கள் பாக்கியவான்கள்" என்பார் திரு.ஜெயகாந்தன்.

என்றபோதும், வினைத் தூய்மை எனும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்வதும் நினைவுக்கு வருகிறது.

"பிறரை அழ வைத்து அவர்களது கண்ணீரில் சேர்த்துக்கொண்டதை எல்லாம்
அழுது இழக்க வேண்டியது இருக்கும்" என்று...

வள்ளுவன் பொய்யா மொழிப் புலவன்.
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்.

No comments:

Post a Comment