Wednesday, December 4, 2013

போலச் செய்தது ...






எல்லாம் சரியாக அமைந்து இருக்கிறதா என்று பார்க்க , நட்சத்திரம் அமர வேண்டிய இடத்தில் , படப்பிடிப்புக் குழுவில் இருக்கிற யாராவது ஒருவரை அந்த இடத்தில் அமர வைத்து MONITOR எடுத்துப் பார்த்துக் கொள்ளுவது சினிமாவில் எப்போதும் இருக்கிற ஒரு நடைமுறை 
அதற்குப் போய் அமர்கிறவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டால் போதுமானது .முக பாவங்களை மாற்றுவதோ , உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோ , நடிப்பதோ MONITOR க்குப் போய் உட்காருகிறவர்கள் செய்ய வேண்டியதே இல்லை 

.எப்போதாவது MONITOR பார்க்க நம்மை அழைக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கும் . அது சினிமாவில் வேலைக்குச் சேர்ந்த புதிது . பெரும்பாலும் காமிராத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் தான் போய் அமர்ந்து கொள்ளுவார்கள் .
ஒரு முறை என்னை அழைத்தார்கள் . படமாக்கப்படும் காட்சி எதுவென்று தெரிந்ததால் கொஞ்சம் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்ட படி போய் அமர்ந்தேன் .எல்லோரும் சிரித்துக் கேலி செய்தார்கள் . எதற்குச் சிரிக்கிறார்கள் என்பது புரியவே கொஞ்ச நேரமாகி விட்டது . எனக்கு அந்தக் காட்சிக்கு ஏற்ப போலச் செய்தது தவறாகப் படவில்லை 



.இந்தப் புகைப்படங்களை தமிழ் சினிமாவின் மாபெரும் நிழற் படக் கலைஞர் நண்பர் கே .வி . ,மணி எடுத்தார் என்பது கூடுதல் பெருமை  



No comments:

Post a Comment