tag:blogger.com,1999:blog-6882329246092764908.post3125002842145552182..comments2023-06-16T14:53:13.895+05:30Comments on உண்மை புதிதன்று: இன்ஷா அல்லாஹ் . . . bharathi krishnakumarhttp://www.blogger.com/profile/01365037555568147736noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6882329246092764908.post-83256761761292575622013-05-08T12:25:32.360+05:302013-05-08T12:25:32.360+05:30அன்புள்ள பாரதி கிருஷ்ண குமார்,
மஸ்கட் தமிழ்சங்கத்...அன்புள்ள பாரதி கிருஷ்ண குமார்,<br /><br />மஸ்கட் தமிழ்சங்கத்தின் இலக்கிய பட்டறையிலே தங்களுடைய பேச்சும் எங்களால் அவ்வண்ணமே உணரப்பட்டது. ஒரு மனிதராய் நீங்கள் உணர்ந்தது, முழுமையாய், ஒரு பேச்சாக எங்களுக்கு உணர்த்தப்பட்டது. ஒரு விதத்தில் இதுவும் நன்று கருதலே என எண்ணுகிறேன். இப்பொழுதும் பசீர் அவர்களுடனான உரையாடல்களில் உங்கள் பேச்சு நினவுகூறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.<br />இத்தகைய அனுபவங்கள் எல்லோருக்கும், எல்லோராலும் அல்லது எதுவாலும், எப்போதும் வாய்ப்பதில்லை. ஒரு மெல்லிய வலை பின்னலை போல சில அனுபவங்கள் பள்ளிவாசல்களில், தேவலாயங்களில், கோவில்களில், கவிதைகளில், கதைகளில், குறுஞ்செய்திகளில், பதிவுகளில், ஒரு வழிபோக்கனின் வார்த்தைகளில், சில நிகழ்வுகளில் எல்லாம் புதைந்து, காலங்கள்தோறும் யாருக்கோ காத்துக்கொண்டே இருப்பதாய் தோன்றுகிறது. ஒரு வினாடியில், நம் அனுமதி இன்றி, நாம் உணரும் முன்னே. ஒரு உறைந்த தருணத்தை நம்முள் ஏற்றி காலத்தை நிறுத்தும் அனுபவங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே வாயக்கின்றது. கண்டவர் அனைவரும் பகிர்ந்தவரில்லை என்பதும் ஒரு குறை. <br />பாரதியின் நிற்பதுவேயும், வண்ணநிலவனின் பெயர் மறந்த, மீண்டும் நான் தேடும் ஒரு கதையும், ராஜசேகரனின் வட்டியும் முதலும், இன்னும் பலவும் இந்த வகையிலேயே என்ன தோன்றுகிறது.<br />நல்ல மனமும், எழுத்தும், பேச்சும், ஒளியும், ஒலியும் உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. பலன் நோக்கா பதிவுகள் உங்கள் கடமை.<br />மஸ்கட்டில் உங்களுடனான இன்னொரு நாளுக்காக காத்திருக்கின்றோம்.<br /><br />நெஞ்சார்ந்த அன்புடன் <br />சண்முக சுந்தரம் <br />மஸ்கட் ஓமான்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/10348399520941167576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-7223021199426011262013-05-08T11:36:53.658+05:302013-05-08T11:36:53.658+05:30அன்புள்ள பாரதி கிருஷ்ண குமார்,
மஸ்கட் தமிழ் சங்க ...அன்புள்ள பாரதி கிருஷ்ண குமார்,<br /><br />மஸ்கட் தமிழ் சங்க இலக்கிய பட்டறையிலே தாங்கள் பகிர்ந்து கொண்ட பேச்சும் அவ்வண்ணமே எங்களால் உணரப்பட்டது. ஒரு மனிதராக நீங்கள் உணர்ந்தது, முழுவதுமாக, பேச்சாக பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டது.(இதுவும் ஒரு விதத்தில் நன்று கருதலே என எண்ணுகிறேன்) நல்ல மனிதம் மிக்க நண்பராக நீங்கள் உணரப்பட்டிர்கள். வாழ்த்துகள். இன்னும் தொடருங்கள். .இப்பொழுதும் பஷீர் மற்றும் நண்பர்கள் உடன் நடக்கும் உரையாடல்களில் தங்களுடைய பேச்சு நினவுகூறப்படுகிறது. முன்னொரு நாள் நிகழ்ந்த திரு. இறையன்பு அவர்களுடைய பேச்சும் அவ்வண்ணமே எங்களால் உணரப்பட்டது. <br /><br />இத்தகைய அனுபவங்கள் எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும், எல்லோராலும் அல்லது எதனாலும் வாய்க்கப்படுவதில்லை. ஒரு மெல்லிய வலை பின்னலை போன்ற சில பதிவுகள் உலகின் பள்ளிவாசல்களாக, தேவாலயங்களாக, கோவில்களாக, சில சம்பவங்களாக, எழுத்துகளாக, கவிதையாக, மனிதர்களாக இன்னும் எதுவாகவோ காத்துக்கொண்டே இருப்பதாகவே படுகிறது. நம் அனுமதியை எதிர்நோக்காமல், வினாடிகளில் ஒரு பதிவை ஏற்றி, நம்முள் ஒரு உறைந்த தருணத்தை, காலங்கள் தோறும் தாங்கிய படியே, மீண்டும் மீண்டும் அனுபவங்களுகாக ஓடும் வாழ்க்கை யார்க்கும் வாய்ப்பதில்லை. அங்ஙனம் வாய்த்தோரும் பகிர்ந்தது மிக குறைவே. <br /><br />பாரதியின் நிற்பதுவே என்னும் கவிதையும், வண்ணநிலவனின் பெயர் மறந்த, மீண்டும் நான் தேடும் ஒரு கதையும், ராஜசேகரனின் வட்டியும் முதலுமாய் வரும் தொடரும், இந்த வகையிலேயே என்னால் உணர முடிந்தது.<br /><br />உங்களுக்கு உணரும் மனமும், வெளிப்படுத்த எழுத்தும், ஒளியும் ஒலியும் அருளப்பட்டு, கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளிர்கள்.<br /><br />தொடருங்கள். <br /><br />மஸ்கட்டில் உங்களோடு இன்னொரு தினத்திற்காக காத்திருக்கின்றோம்.<br /><br />சண்முக சுந்தரம்.<br />மஸ்கட், ஓமான். Anonymoushttps://www.blogger.com/profile/10348399520941167576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6882329246092764908.post-4565604176593165452013-05-06T23:55:54.560+05:302013-05-06T23:55:54.560+05:30ரசித்து எழுதியுள்ளீர்கள்
ரசித்து எழுதியுள்ளீர்கள்<br />vijihttps://www.blogger.com/profile/05568076616014645899noreply@blogger.com