Friday, May 4, 2018

படித்ததில் பிடித்தது - திரு பாலு மகேந்திரா

என் மதிப்பிற்குரிய மனிதர் திரு . பாலு மகேந்திரா . எனது சிறுகதைத்தொகுப்பு அவரது கைகளுக்குக் கிடைத்ததும் , அழைத்தார் .
ஓடிப் போனேன் .
கைகளைப் பற்றிக் கொண்டார் .
மனமாரப் பாராட்டினார் .
அகம் மிக மகிழ்ந்து போனேன் .
எவ்வளவு பெரிய ஆளுமை அவர் .

இந்த உலகை விட்டு மறைவதற்கு , சில வாரங்களுக்கு முன்பு ஒரு தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ...
என் சிறுகதைத் தொகுப்பு பற்றியும் பேசி இருக்கிறார் .
அவருக்குப் படித்ததில் பிடித்ததாம் .

எவ்வளவு படிக்கிற ஆள் அவர் என்று , அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள் . அவர் அறிந்த மகா சமுத்திரத்தில் , ஒரு துளி போன்ற எனது படைப்பை உயர்த்திக் காட்டினார் .

நீங்கள் இருந்தால் புன்னகையோடு நன்றி சொல்லி இருப்பேன்.
நீங்கள் இல்லையென்பதால் கண்ணீரோடு நன்றி சார் ....


https://youtu.be/VwhQclpDeWg


இந்த இணைப்பில் அவர் பேசுகிறார் .


Image result for பாலு மகேந்திரா